Saturday, 22 July 2017

என் ஆயன் இயேசு

என் ஆயன் இயேசு பாடல்



என் ஆயன் இயேசு  பாடல் வரிகள்


என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது
என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி மகிழும் வேளையிது - 2
என் தவம் நான் செய்தேன் எந்நன்றி நான் சொல்வேன் - 2

பல்லவி - 1
பசியால் வாடும் ஏழையின் நிலையில் பாவி நான் நின்றிருந்தேன்
பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி அருளமுதை ஈந்தார் - 2
அருளமுதை ஈந்தார்

பல்லவி - 2
கருணையின் அமுதே பவித்திர அழகே காலமெல்லாம் வருவாய்
பெருமையின் வேந்தே பேரருட்சுடரே
பாசத்தினைப் பொழிவாய் - 2
பாசத்தினைப் பொழிவாய்

பல்லவி - 3
அகிலமும் உமதே ஆற்றலும் உமதே ஆண்டவனே எழுவாய்
இகமதில் இனிமை பொழிந்திடும் இறைவா
இன்புறவே எழுவாய் - 2
இன்புறவே எழுவாய்

நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன்

நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன்



நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன் பாடல் வரிகள்


நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன்
உனையழைத்தேன் நீ வா வா
சிந்தையெல்லாம் நொந்தழுதேன் -2 சொந்தமெல்லாம்

பல்லவி - 1
அன்புமொழி பேசும் இன்பமுகில் இயேசு
எந்நாளும் நண்பன் நீயே - 2
கண்ணின் மணிபோல காத்திடுவோனே - 2
உன் அன்பு ஒன்றே நான் வேண்டினேன்

பல்லவி - 2
வானின் முழு நிலவே வாழும் உயிர்ச்சுடரே
நீயின்றி வாழ்வேதைய்யா - 2
பாடி வரும் தென்றலில் ஆடிடும் மலராய் - 2
உன் ஆசீர் தந்தால் மகிழ்வேனைய்யா

பல்லவி - 3
சோகம் வந்து தாக்கும் போது என்னைக் காக்கும்
என் ஆயன் நீயே அன்றோ- 2
மாசு கொண்ட உள்ளம் பேசும் உந்தன் நாமம்
இயேசு எந்தன் வாழ்வின் தெய்வம் நீயே

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ



நெஞ்சத்திலே தூய்மையுண்டோ பாடல் வரிகள்


நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார் - 2

பல்லவி - 1
வருந்திச் சுமக்கும் பாவம் நம்மைக் கொடிய இருளில் சேர்க்கும்- 2
செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் -2
அவர் பாதம் வந்து சேரும்

பல்லவி - 2
குரதி சிந்தும் நெஞ்சம் உன்னை கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
செய்த பாவம் இனி போதும் அங்கு பாரும் செந்நீர் வெள்ளம்
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம்

தெய்வ தரிசனம் தேடும் மனம் தினம்

தெய்வ தரிசனம் தேடும் மனம் தினம்



தெய்வ தரிசனம் தேடும் மனம் தினம் பாடல் வரிகள்


தெய்வ தரிசனம் தேடும் மனம் தினம்
தேவன் வரவிலே ஜீவன் உருகிடும்
இதைப் பாடாத நாளில்லையே இதைத் தேடாமல் வாழ்வில்லையே
இறைவா இறைவா என் இதயம் இணைவாய் - 2

பல்லவி - 1
வாழ்வு வழங்கும் வல்ல தேவன் வரவு என்னிலே
வசந்தம் என்றும் வசந்தம் எந்தன் வாழ்வு தன்னிலே
வானதேவன் வார்த்தை இங்கு வடிவம் ஆனதே
வானும் மண்ணும் அழிந்த பின்னும் வாழும் என்னிலே
ஒளியே ஒளியே உலகின் ஒளியே
உயிரே உயிரே உயிரின் உயிரே - உமைப் பாடாத....

பல்லவி - 2
அன்பிற்காக ஏங்கும் நெஞ்சம் ஆசை ஓய்ந்திடும்
அழிவில்லாத அன்பின் நேசம் அரவணைத்திடும்
நினைவில் ஆடும் நிழல்கள் யாவும் நிஜங்களாகிடும்
நீங்கிடாமல் நிறைவின் நேசம் நிதமும் தொடர்ந்திடும்
ஒளியே ஒளியே உலகின் ஒளியே
உயிரே உயிரே உயிரின் உயிரே - உமைப் பாடாத....

சொந்தம் தேடும் எந்தன் உள்ளம் இயேசுவே வாரும்

சொந்தம் தேடும் எந்தன் உள்ளம் பாடல்



சொந்தம் தேடும் எந்தன் உள்ளம்  பாடல் வரிகள்


சொந்தம் தேடும் எந்தன் உள்ளம் இயேசுவே வாரும்
சுமைகள் சுமந்து சோர்ந்த வாழ்வில் அமைதியைத் தாரும்- 2
உறவில் நானும் வளர்ந்திட உன் அருளைப் பொழிந்திடு

பல்லவி - 1
ஓடைநீரை நாடிவரும் மானின் நிலையினில்
உயிரின் தாகம் தீர்க்கும் உந்தன் அன்பை எண்ணியே - நான்
ஏங்கினேன் என் இதயம் திறந்தேன் இனிமை சேர்த்திட வா
இயேசுவே உம் பாதம் தொடர்ந்திடவே ஆற்றலை அளித்திட வா
துணையென நீ வருகையில் தயக்கமில்லையே
துயிலும் போதும் நடக்கும் போதும் கலக்கமில்லையே

பல்லவி - 2
அமைதி உன்னில் காணும்போது வசந்தம் மலருதே
அன்பில் இணைந்து வாழும்போது நிறைவு நெஞ்சிலே - நான்
தேடினேன் உன் வரவில் மகிழ்ந்தேன்
வருந்தும் மனங்களெல்லாம்
இயேசுவே உன் மார்பில் சாய்ந்திடவே பேரருள் பொழிந்திட வா
துணையென நீ வருகையில் தயக்கமில்லையே
துயிலும் போதும் நடக்கும் போதும் கலக்கமில்லையே

ஒருபோதும் உனைப் பிரியா

ஒருபோதும் உனைப் பிரியா பாடல்



ஒருபோதும் உனைப் பிரியா  பாடல் வரிகள்


ஒருபோதும் உனைப் பிரியா
நிலையான உறவொன்று வேண்டும்
என் உடல்கூட எரிந்தாலும்
உன் நாமம் நான் சொல்ல வேண்டும்
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே- 2
நீங்காத நிழலாக வா இறைவா

பல்லவி - 1
உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் எனை அழைத்தாய்- 2
ஏன் என்னை நீ தெரிந்தாய் என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்
உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் - தாய்
உறவொன்று தேடும் பிள்ளைபோல் நின்றேன்
உன்னோடு நான் வாழுவேன்

பல்லவி - 2
நீர் தேடும் மான் போல தேடி வந்தேன்
நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன்- 2
என்னுள்ளே வாழும் தெய்வம் என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசு நீயே என்னுள்ளம் நின்றாய் - நிதம்
என் பாதை முன்னே நீ தானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன்

என்னோடு நீ பேச வந்தாய்

என்னோடு நீ பேச வந்தாய் பாடல்



என்னோடு நீ பேச வந்தாய்  பாடல் வரிகள்


என்னோடு நீ பேச வந்தாய்
என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்- 2
என் தெய்வமே என் தெய்வமே
நீயின்றி நானில்லையே உன் நினைவின்றி வாழ்வில்லையே

பல்லவி - 1
இதய தாகம் நீ இருளில் தீபம் நீ
உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ
தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்
தீராத துன்பங்களில் நீ தாயாகி தாலாட்டினாய்

பல்லவி - 2
உயிரின் தீபம் நீ உலகின் வேதம் நீ
மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ
என் பாதையில் முன்போக வா
கண் போலவே எனைக் காக்க வா
ஆதாரம் நீயாகவே உன் அன்பொன்றே எனதாகவே

என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே

என் சுவாசக் காற்றே பாடல்



என் சுவாசக் காற்றே  பாடல் வரிகள்


என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னைத் தருவாய்
என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்

பல்லவி - 1
என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்

பல்லவி - 2
எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப்போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே - 2
நிழலாய் நினைவாய் வாழ்வினில் வருவாய்

ஏழிசை நாதனே எழுவாய்

ஏழிசை நாதனே எழுவாய் பாடல்



ஏழிசை நாதனே எழுவாய்  பாடல் வரிகள்


ஏழிசை நாதனே எழுவாய் - இறை
அருளை என்னில் நீ பொழிவாய்
பல வரங்கள் தந்து எனைக் காப்பாய்
வழிகாட்ட எழுந்து வருவாய்

பல்லவி - 1
வாழ்வும் வழியும் நீ எனக்கு வளங்கள் சேர்க்கும் அருமருந்து - 2
உறவை வளக்கும் விருந்து - 2
என்னில் நிறைவை அளிக்கும் அருளமுது
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து - 2

பல்லவி - 2
விழியும் ஒளியும் நீ எனக்கு விடியல் காட்டும் ஒளி விளக்கு - 2
மனிதம் வாழும் தெய்வம் - 2
என்னில் புனிதம் வளர்க்கும் நல் இதயம்
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து - 2

செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பட்டோர்

செம்மறியின் விருந்துக்கு பாடல்



செம்மறியின் விருந்துக்கு  பாடல் வரிகள்


செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர்
அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க - 2

பல்லவி - 1
இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன
உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன - 2
உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய்
உவகை என்னும் ஒளி கொணர்ந்து என்னை ஆளுவாய்

பல்லவி - 2
வானம் பொழிய பூமி விளையும் வளமும் பொங்குமே
வலமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே - 2
எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே
உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே

உன் சிறகுகள் நிழலில்

உன் சிறகுகள் நிழலில்பாடல்



உன் சிறகுகள் நிழலில்  பாடல் வரிகள்


உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா
எந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண்தணலிலும் மனம் குளிரும் - 2
உந்தன் கண்களின் இமைபோல்
எந்நாளும் என்னைக் காத்திடு என் இறைவா- 2

பல்லவி - 1
பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும்- 2
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும்- 2

பல்லவி - 2
வலையினில் விழுகின்ற பறவை
அன்று இழந்தது அழகிய சிறகை- 2
வானதன் அருள் மழை பொழிந்தே
நீ வளர்த்திடு அன்பதன் உறவை- 2

நீ எந்தன் பாறை

நீ எந்தன் பாறை பாடல்



நீ எந்தன் பாறை  பாடல் வரிகள்


நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே- 2
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே- 2

பல்லவி - 1
ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ
உன் துணையில் வாழ்கையில் துயர் வெல்லுமோ- 2
தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம்- 2
ஆனாலும் உன் வார்த்தை உண்டு
எது போனாலும் உனில் தஞ்சம் உண்டு இயேசுவே இயேசுவே - 2

பல்லவி - 2
இரவுக்கும் எல்லை ஓர் விடியலன்றோ
முடிவாக வெல்வதும் நன்மையன்றோ - 2
தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம்- 2
என்றென்றும் உன் ஆசீர் கொண்டு
வரும் நல்வாழ்வைக் கண்முன்னே கொண்டு
இயேசுவே இயேசுவே- 2

அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க

அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க பாடல்



அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க  பாடல் வரிகள்


அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க
நெஞ்சோடு நித்தம் அவர் நினைவிருக்க- 2
உன் தாயின் உதிரத்தால் உனைத் தெரிந்தார்
உன் வாழ்வில் உறவாய் உன்னில் இணைந்தார்

பல்லவி - 2
தீயின் நடுவே தீமை இல்லை
திக்கற்ற நிலையில் துயரம் இல்லை
தோல்வி நிலையில் துவண்டு வாழும்
துன்பம் இனியும் தொடர்ந்திடாது
காக்கும் தெய்வம் காலமெல்லாம் - 2
கரத்தில் தாங்கிடுவார் அன்பின் கரத்தில் தாங்கிடுவார்

பல்லவி - 2
தூர தேசம் வாழ்க்கைப் பயணம்
தேவன் நேசம் உன்னைத் தொடரும்
பாவம் யாவும் பறந்து போகும்
பரமன் அன்பில் பனியைப் போல
வாழும் காலம் முழுதும் உன்னில்- 2
வசந்தம் வீசிடுமே அன்பின் வசந்தம் வீசிடுமே

என் ஆயனாய் இறைவன் இருக்கின்ற போது

என் ஆயனாய் இறைவன் இருக்கின்ற போது பாடல்



என் ஆயனாய் இறைவன் இருக்கின்ற போது  பாடல் வரிகள்


என் ஆயனாய் இறைவன் இருக்கின்ற போது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது- 2

பல்லவி - 1
என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே- 2
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா - 2

பல்லவி - 2
என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் படர்ந்திடும் பாதையிலே- 2
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா

வரம் கேட்டு வருகின்றேன் பாடல்



வரம் கேட்டு வருகின்றேன்  பாடல் வரிகள்


வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா - 2

பல்லவி - 1
பகைசூழும் இதயத்துச் சுவரையெல்லாம் - என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
புகைசூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் - 2 உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்

பல்லவி - 2
நம்பிக்கை இழந்தோரின் முகம் பார்த்தபின் - நல்
நம்பிக்கை பெற வேண்டும் என கேட்கிறேன் - 2
அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்தபின் - 2
உன் அன்பு எண்ணி வரவேண்டும் என கேட்கிறேன்

உங்கள் பயிற்சிக்காக
பல்லவி - 3
நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
பலியாக பிறர்க்கென்னை அளித்திட்டபின் - 2 என்
பரிசாக உனை கேட்கும் வரம் கேட்கின்றேன்

பல்லவி - 4
எளியோர் தம் விழி பேசும் துயரமெல்லாம் - என்
இதயத்தை பிளக்கட்டும் எனக்கேட்கின்றேன் - 2
ஒழியில்லா இல்லங்கள் இதயங்களில் - 2
நல் ஒழியேற்றும் விளக்காக வரம் கேட்கின்றேன்

தீபத்தின் ஒளியினில் இணைவோம்

தீபத்தின் ஒளியினில் இணைவோம் பாடல்



தீபத்தின் ஒளியினில் இணைவோம்  பாடல் வரிகள்


தீபத்தின் ஒளியினில் இணைவோம்
திருப்பலி செலுத்திட விரைவோம் - 2
புனிதம் மலர்ந்திட மனிதம் மகிழ்த்திட

பல்லவி - 1
நல்வாழ்வின் தீபங்களாய் இங்கு நாளெல்லாம் ஒளிர வாருங்களே
நம்வாழ்வின் தேவைகளை தினம் நல்லோர்க்கு இயேசு தந்திடுவார்
அவரின் இல்லம் தினம் வந்தால் - நம் உள்ளங்கள் ஒளியில் நிறைந்திடுமே - 2
அன்பு செய்யும் உள்ளங்களே இறைவனின் அருள் பெறும் இல்லங்களே - 2

பல்லவி - 2
இயேசுவோடு நாம் இணைந்தால் என்றும் நம் வாழ்வில் தோல்விக்கு இடமில்லையே
நன்மை செய்து நீ மகிழ்ந்தால் இங்கு உண்மை ஒளி உனக்கு கிடைத்திடுமே
வார்த்தை இங்கு மனுவானார் - நம் வாழ்வினில் என்றும் குடிகொண்டார் - 2
அன்பு செய்யும் உள்ளங்களே இறைவனின் அருள் பெறும் இல்லங்களே - 2

Friday, 21 July 2017

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம் பாடல்



அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்  பாடல் வரிகள்


அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம் - 2
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் - 2

பல்லவி - 1
தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
அறிந்து எங்களைத் தேர்ந்த தெய்வமே
பாவியாயினும் பச்சப் பிள்ளையாயினும்
அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்
மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர்
பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர்
அஞ்சாதே என்று எம்மைக் காத்து வருகின்றீர்

பல்லவி - 2
உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்
உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்
உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்
உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்
அழித்து ஒழிக்கக் கவிழ்த்து வீழ்த்தத் திட்டம் தீட்டினீர்
கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர்
அஞ்சாதே என்று எம்மைக் காத்து வருகின்றீர்

அழைக்கிறார் இயேசு ஆண்டவர்

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் பாடல்



அழைக்கிறார் இயேசு ஆண்டவர்  பாடல் வரிகள்


அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் - 2
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட - 2
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே

பல்லவி - 1
தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் - 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

பல்லவி - 2
அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் - 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

Thursday, 20 July 2017

அமைதி தேடி அலையும் நெஞ்சமே

அமைதி தேடி அலையும் நெஞ்சமே பாடல்



அமைதி தேடி அலையும் நெஞ்சமே  பாடல் வரிகள்


அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே - 2
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2
அவரன்றி வேறில்லையே

பல்லவி - 1
போற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை
எந்நாளுமே என் வாழ்விலே - 2

காடுமேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு
நாடுதே அது தேடுதே - 2

பல்லவி - 1
இறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே
என் தேவனே என் தலைவனே - 2
பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்
என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே - 2

இடைவிடா சகாயமாதா

இடைவிடா சகாயமாதா பாடல்



இடைவிடா சகாயமாதா  பாடல் வரிகள்


இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா
பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள்
நிதம் துணை சேர்ப்பாயே - 2

பல்லவி - 1
ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை
தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் - 2
மாறாத கொடுமை நீங்காத வறுமை
தானாக என்றுமே மாற்றிடுவாள் - 2

பல்லவி - 2
கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி
உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2
வெள்ளம் போல் அருள்கருணை பாய்ந்திட
தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் - 2

இயற்கையில் உறைந்திடும்

இயற்கையில் உறைந்திடும் பாடல்



இயற்கையில் உறைந்திடும்  பாடல் வரிகள்


இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா என் இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு காத்திடு என் தலைவா - 2

பல்லவி - 1
உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ - 2
மெழுகாகினேன் திரியாக வா மலராகினேன் மணமாக வா - 2

பல்லவி - 2
உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுதோ - 2
குயிலாகினேன் குரலாக வா மயிலாகினேன் நடமாட வா - 2

இதை என் நினைவாய்ச் செய்ய மாட்டாயா

இதை என் நினைவாய்ச் செய்ய பாடல்



இதை என் நினைவாய்ச் செய்ய மாட்டாயா  பாடல் வரிகள்


இதை என் நினைவாய்ச் செய்ய மாட்டாயா
என் உடலை உண்டு உயர மாட்டாயா
குருதி அருந்தி திருந்த மாட்டாயா (என்) - 2
என்னைப்போல வாழ மாட்டாயா - இதை

பல்லவி - 1
கன்னத்தில் அறைந்தால் கன்னத்தைக் காட்டச் சொன்னேன்
தீமை செய்தால் நன்மை செய்யச் சொன்னேன் - 2
இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன் - 2
வெறும் வாத்தையல்ல வாழ்ந்தும் காட்டிவிட்டேன் - 2

பல்லவி - 2
பணிவிடை பெற அன்று பணியைச் செய்யச் சொன்னேன்
தாழ்ச்சி கொண்டால் உயர்வு உறுதியென்றேன் - 2
இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன் - 2
உனை வாழச் செய்ய வாழ்ந்தும் காட்டிவிட்டேன் - 2

தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து

தந்திட்ட பொருட்கள் யாவையும் பாடல்



தந்திட்ட பொருட்கள் யாவையும்  பாடல் வரிகள்


தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து
தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய் - 2

பல்லவி - 1
வழங்கிட கனியோ உணவோ இன்றி
வாடிடும் வறியோர் பலர் இறைவா - 2
வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி
வேறெதும் அல்லா நிலை இறைவா

பல்லவி - 2
உனக்கென எம்மை வழங்கிடும் வேளை
உன்னருள் இவர்க்காய்க் கேட்கின்றோம் - 2
எங்கள் மனம் பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர்தம்
மனத்துயர் நீங்க படைக்கின்றோம்

அகவிருந்தாக என் இறைவா வா

அகவிருந்தாக என் இறைவா வா பாடல்



அகவிருந்தாக என் இறைவா வா  பாடல் வரிகள்


அகவிருந்தாக என் இறைவா வா - மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா - 2

பல்லவி - 1
1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே - திரு
ஆகமம் முழங்கிடும் உயிர் மொழியே - 2
உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் - 2
உமதுடலென எமை நீ மாற வைத்தாய்

பல்லவி - 2
2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால்
எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் - 2
உமையடைந்திட யாம் தகுதியற்றோம் - 2
இனி உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்

வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன்

வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன் பாடல்



வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன்  பாடல் வரிகள்


வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன் என்னையே ஏற்றிடுவாய்
முழுமனதுடனே கையளிக்கின்றேன் காணிக்கை ஏற்றிடுவாய் - 2

பல்லவி - 1
கோதுமை மணியும் திராட்சைக் கனியும்
புது உரு பெறுவது போல் - 2
அன்பும் அமைதியும் நீதியுமே
மனிதனில் மலர்ந்திட உயிர் தருவாய் - 2

பல்லவி - 2
நான் வாழ பிறரும் பிறர் வாழ
நானும் தேவை என்றுணர்ந்தேன் - 2
சமத்துவ சோதர நோக்குடனே
புதுயுகம் காண்போம் அகத்தினிலே - 2

Wednesday, 19 July 2017

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்

அதிசயங்கள் செய்கிறவர் பாடல்



அதிசயங்கள் செய்கிறவர்  பாடல் வரிகள்


அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்

பல்லவி - 1
தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம் -எகிப்து - 2
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் - 2

பல்லவி - 2
செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம் - 2
புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் - 2

பல்லவி - 3
குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் - 2
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் - 2

பல்லவி - 4
பாவியான என்னையுமே உயர்த்தினார் அதிசயம் – இந்த - 2
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம் - 2

என்னில் வந்த நாதனுக்கு என்னைக் காக்கும் தேவனுக்கு

என்னில் வந்த நாதனுக்கு பாடல்



என்னில் வந்த நாதனுக்கு  பாடல் வரிகள்


என்னில் வந்த நாதனுக்கு என்னைக் காக்கும் தேவனுக்கு
நெஞ்சார என்றும் நன்றி சொல்வேன்
வாழ்வளித்த வள்ளலுக்கு வாழ்வளிக்கும் இயேசுவுக்கு
வானெங்கும் முழங்க நன்றி சொல்வேன்
நன்றி நன்றி என்றும் நன்றி சொல்வேன் - 2

பல்லவி - 1
பாவங்களைப் போக்கினார் நன்றி சொல்வேன்
பயமதையே நீக்கினார் நன்றி சொல்வேன் - 2
பரிவுடனே நோக்கினார் நன்றி சொல்வேன்
பாதைதனைக் காட்டினார் நன்றி சொல்வேன்
உண்மை அன்பு நீதியை உணரச் செய்த இயேசுவை
உளமாரப் பாடியே நன்றி சொல்வேன் - 2 - நன்றி...

பல்லவி - 2
எளியவரை நோக்கினார் நன்றி சொல்வேன்
ஏழைகளை நேசித்தார் நன்றி சொல்வேன் - 2
அடிமைகளின் விலங்கொடித்தார் நன்றி சொல்வேன்
அடியவரின் குரல் கேட்டார் நன்றி சொல்வேன்
உரிமை தரும் வேள்வியை உணரச் செய்த இயேசுவை
ஆடியே பாடியே நன்றி சொல்வேன் - 2 - நன்றி ...

நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே

நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே பாடல்



நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே  பாடல் வரிகள்


நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே
நன்மை செயல்கள் செய்த உந்தன் அன்பைப் பாடியே - 2
கோடி நன்றி பாட்டுப் பாடுவேன்
காலமெல்லாம் வாழ்த்துக் கூறுவேன் - 2

பல்லவி - 1
உயிர்கள் யாவும் வாழ நல்உலகைப் படைத்ததால்
உறவு வாழ்வு வளர நல்உள்ளம் உறைந்ததால்
நிஜங்கள் யாவும் நிலைக்க நற்செய்தி தந்ததால்
நிழல்கள் துன்பம் மறைய திருவிருந்தை அளித்தால்
பகிர்ந்து வாழ்வில் வளர நல்மனதைக் கொடுத்ததால்
பரமன் அன்பில் வாழ அருள்வரங்கள் பொழிந்ததால் - 2

பல்லவி - 2
பகிர்ந்து வாழும் அன்பு வாழ்வில் என்னை சேர்த்ததால்
ஜெபித்து நின்று வேண்டும்போது என்னைக் காப்பதால்
நேசக்கரத்தை நீட்டி வந்து நன்மை செய்வதால்
துன்ப துயரைப் பனியைப் போல விலக வைப்பதால்
உண்மை அன்பில் உள்ளம் மகிழத் தந்ததால்
உந்தன் ஒளியே உலகில் எந்தன் வழியாய் ஆனதால் - 2

கருணை மழையே மேரி மாதா

கருணை மழையே மேரி மாதா பாடல்



கருணை மழையே மேரி மாதா  பாடல் வரிகள்


கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ - 2

பல்லவி - 1
கன்னிமாதா தேவசபையின் கதவு திறவாதோ - 2
கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ - 2

பல்லவி - 2
தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே - 2
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே
ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே
உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே - 2

Monday, 17 July 2017

தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே

தெய்வீக பலியில் உறவாடும் பாடல்



தெய்வீக பலியில் உறவாடும்  பாடல் வரிகள்


தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே - 2
உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய் காணிக்கை ஏற்றிடுவாய்
தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே

பல்லவி - 1
வானம் காணும் ஒளி எல்லாம் என்
தேவன் தந்த காணிக்கை - 2
மேகம் சிந்தும் துளி எல்லாம்
என் தேவன் தந்த காணிக்கை - 2
இந்த நினைவில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம்

பல்லவி - 2
வேதம் சொன்ன வழி எல்லாம் என்
தேவன் தந்த காணிக்கை - 2
பாதம் படைத்த கனி எல்லாம் என்
தேவன் தந்த காணிக்கை - 2
இந்த நினைவில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம்

வணக்கம் வணக்கம் வணக்கமம்மா

வணக்கம் வணக்கம் வணக்கமம்மா பாடல்



வணக்கம் வணக்கம் வணக்கமம்மா பாடல் வரிகள்


வணக்கம் வணக்கம் வணக்கமம்மா
வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே - 2

பல்லவி - 1
மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா - எழில்
மலர்ந்திடும் இசையாலே வணக்கம் அம்மா - 2
நினைக்கும் என் நினைவாலே குவிக்கும் என் கரத்தாலே
தித்திக்கும் காவியமாய் தேவனை சுமந்தவளே - 2

பல்லவி - 2
வேளைநகர் வந்த விண்ணவர் தாயே
வேண்டும் அன்பரின் உடல் பொருள் நீயே - 2
தாளைப் பணிந்தவர்க்கே தஞ்சம் அளித்தாயே
கத்தும் கடல் ஓரம் ஆலயம் கொண்டாயே

மாதாவே துணை நீரே உம்மை

மாதாவே துணை நீரே உம்மை பாடல்



மாதாவே துணை நீரே உம்மை  பாடல் வரிகள்


மாதாவே துணை நீரே உம்மை வாழ்த்திப் போற்ற வரந்தாரும்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா
ஏற்றன் பாக எமைப் பாரும் - 2

பல்லவி - 1
வானோர் தம்மரசே தாயே எம் மன்றாட்டைத் தயவாய் கேளும் - 2
ஈனோர் என்றெம்மை நீர் தள்ளாமல் எக்காலத்துமே தற்காரும்

பல்லவி - 2
கேட்டிடுவோம் தாயே யாம் ஓர் சாவான பாவந்தானும் - 2
என்றேனும் செய்திடாமற் காத்து எம்மை சுத்தர்களாய்ப் பேணும்

தந்தேன் வாழ்வினை அர்ப்பணமாய்

தந்தேன் வாழ்வினை அர்ப்பணமாய் பாடல்



தந்தேன் வாழ்வினை அர்ப்பணமாய்  பாடல் வரிகள்


தந்தேன் வாழ்வினை அர்ப்பணமாய்
தலைவனுன் பீடத்தில் காணிக்கையாய் - 2
தகுதியில்லா என்னை உம் அன்பினால்
தயவுடன் ஏற்பாய் பலிப்பொருளாய்

பல்லவி - 1
உழைப்பின் பலனைப் படைத்திட வந்தேன்
உம் திருப்பதத்தில் எனை ஏற்க வேண்டும் - 2
உம் அருள் துணை நம்பி வாழ்வினைத் தொடர்ந்திட - 2
உவந்து நீர் ஏற்பீர் ஏழை என் காணிக்கை
இறைவா ஏற்பாய் நிலைக்கும் உறவாய்
இறைவா இணைப்பாய் என் வாழ்வை இனிதாய்

பல்லவி - 2
ஆறுதல் இன்றி வாழ்ந்திடும் வறியோர்
ஆனந்தம் அடைந்திட அடியேனைத் தேர்ந்தீர் - 2
அன்பதன் கொடைகளை அவனிக்கு அளித்திட - 2
அர்ப்பண பலி என்னை அன்பாய் ஏற்பீர்
இறைவா ஏற்பாய் நிலைக்கும் உறவாய்
இறைவா இணைப்பாய் என் வாழ்வை இனிதாய்

ஆரோக்கிய மாதாவே உமது புகழ்

ஆரோக்கிய மாதாவே உமது புகழ் பாடல்



ஆரோக்கிய மாதாவே உமது புகழ்  பாடல் வரிகள்


ஆரோக்கிய மாதாவே உமது புகழ்
பாடித் துதித்திடுவோம் - எந்நாளும்
பாடித் துதித்திடுவோம் - 2

பல்லவி - 1
அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே
வசித்திட ஆசை வைத்தாயே - 2
பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட
அனைவருக்கும் துணை புரிந்தாயே - 2

பல்லவி - 2
தேன் கமழும் சோலை சூழ்ந்து விளங்கும்
வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே - 2
வானுலகும் இந்த வையகமும் - அருள்
ஓங்கிட எங்கும் நிறைந்தாயே - 2

பல்லவி - 3
முடவன் தந்த மோரைப் பருகிக் கொண்டே - அவன்
குறைகளை நீக்கிட நினைத்தாயே - 2
நடந்திடக் கால்களும் நோயற்ற வாழ்வும்
இயேசுவின் அருளால் கொடுத்தாயே - 2


உங்கள் பயிற்சிக்காக
பல்லவி - 4
பாலன் இயேசுவின் பசியைப் போக்கவே
பசும்பால் வாங்கித் தந்தாயே - 2 - இந்த
உலகம் உள்ளவரை உன்னை வேண்டிக்கொள்ளும்
அடிமைகள் வாழ்ந்திட அருள்புரிவாய் - 2

பல்லவி - 5
சக்தி விளங்கும் உந்தன் தரிசனம் கிடைத்தால்
சஞ்சலம் யாவும் தீர்ந்திடுமே - 2
பக்தியுடன் உன்னைப் பணிந்து போற்றுபவர்
வாழ்வினிலே இன்பம் நிறைந்திடுமே - 2

பல்லவி - 6
கவலையினால் மனம் வருந்தும் ஏழைகளின்
கண்ணீரைக் கனிவுடன் துடைத்தாயே - 2 - நமது
நன்னாளில் வந்து தானங்கள் செய்பவர்
உன்னத நிலைபெற வைத்தாயே

இதயம் மகிழுதம்மா

இதயம் மகிழுதம்மா பாடல்



இதயம் மகிழுதம்மா  பாடல் வரிகள்


இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா
உள்ளமும் துள்ளுதம்மா - உந்தன்
தாய்மையின் நினைவாலே அம்மா

பல்லவி - 1
தாயெனும் போதினிலே மனம் தானுனைத் தேடுதம்மா - 2
ஈன்ற தாயும் போற்றும் உந்தன்
பாதம் பணிந்திடுவேன் அம்மா

பல்லவி - 2
அன்னை உன் அன்பினிலே என்றும் அடைக்கலம் தாருமம்மா - 2
நாளும் பொழுதும் உந்தன் நாமம்
பாடிப் புகழ்திடுவேன் அம்மா

Sunday, 16 July 2017

என் ஆன்மா எந்நாளுமே

என் ஆன்மா எந்நாளுமே பாடல்



என் ஆன்மா எந்நாளுமே  பாடல் வரிகள்


என் ஆன்மா எந்நாளுமே
ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது
என் மீட்பரை நினைத்து நினைத்து
எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது - 2

பல்லவி - 1
ஏழைகளை எளியவரை உயர்த்தினார்
பல இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார் - 2
செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் - 2 நெஞ்சில்
செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார் - 2

பல்லவி - 2
அடிமைகளை அன்புடனே நோக்கினார் - அவர்
ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார் - 2
தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் - 2 வாழ்வில்
வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார் - 2

ஆண்டவரை நான் போற்றிடுவேன்

ஆண்டவரை நான் போற்றிடுவேன் பாடல்



ஆண்டவரை நான் போற்றிடுவேன்  பாடல் வரிகள்


ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன்

பல்லவி - 1
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
அவர் புகழை நானும் பாடிடுவேன்-2
என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும் -2
எளியவர் இதைக்கேட்டு மகிழ்வாராக -2

பல்லவி - 2
ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி
ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார்-2
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே -2 என்று
சுவைத்துப்பாருங்கள் -2
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று

எந்தன் இதய இனிய வேந்தன்

எந்தன் இதய இனிய வேந்தன் பாடல்



எந்தன் இதய இனிய வேந்தன்  பாடல் வரிகள்


எந்தன் இதய இனிய வேந்தன்
என்னில் வந்து தங்கும் நேரம் வந்ததும் வசந்தம் வீசுமே
வசந்தத்தில் வாழ்வுண்டு வாழ்வில் அவனுண்டு - 2
என்னில் அவனும் அவனில் நானும் என்றும் ஒன்றுதானே

பல்லவி - 1
வாழ்க்கை மூச்சு நின்றுவிடும் அன்பே
வீசிடும் காற்று நீ எனில் இல்லையென்றால் - 2
ஓடோடி வந்தேன் உனை என்னில் ஏற்க
ஒன்றாகும் நேரம் நான் உன்னைப்பாட ஆ..
அன்பு தெய்வமே அருள் தாருமே
நீ மீட்டும் வீணையும் நான் பாடும் பாடலும்
இறைக்கடலில் சங்கமிக்கும் இதய வேந்தனே

பல்லவி - 2
நிம்மதி நீயாய் இருக்கின்றபோது
நிதமும் நீ என்னில் தங்கிடவேண்டும் - 2
சிந்தனைகள் யாவும் நீர் சீர்படுத்தவேண்டும்
சொல் செயல் யாவும் தூய்மையாக வேண்டும் ஆ..
அன்பு தெய்வமே அருள் தாருமே
என் வறுமை எனும் இருள் உன் வளமை ஒளியிலே
அகன்றிட வேண்டும் என் அன்பு தெய்வமே

இயேசுவே உந்தன் வார்த்தையால்

இயேசுவே உந்தன் வார்த்தையால் போல பாடல்



இயேசுவே உந்தன் வார்த்தையால்  பாடல் வரிகள்


இயேசுவே உந்தன் வார்த்தையால்
வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அன்புப் பாதையில்
கால்கள் நடந்திடுமே
தேவனே உந்தன் பார்வையால் என்
உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே

பல்லவி - 1
தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன்
வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுய நலங்களும் இங்கு
வீழ்ந்து ஒழிந்திடுமே - 2
நீதியும் அன்பின் மேன்மையும்
பொங்கி நிறைந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே.

பல்லவி - 2
நன்மையில் இனி நிலைபெறும் என்
சொல்லும் செயல்களுமே
நம்பிடும் மக்கள் அனைவரும்
ஒன்றாகும் நிலைவருமே - 2
இன்றெழும் புது விந்தைகள்
உன்னைப் புகழ்ந்திடுதே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுதே

Saturday, 15 July 2017

வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்

வானம் திறந்து வெண்புறா போல பாடல்



வானம் திறந்து வெண்புறா போல  பாடல் வரிகள்


வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும் - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2

பல்லவி - 1
மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறுரூபமாக மாற வேண்டும் - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2

பல்லவி - 2
வரங்கள் கனிகள் பொழியணுமே
வல்லமையோடு வாழணுமே - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2


உங்கள் பயிற்சிக்காக
பல்லவி - 3
பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்
பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2

பல்லவி - 4
அற்புதம் அதிசயம் நடக்கணுமே
சாட்சிய வாழ்வு வாழணுமே - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2

பல்லவி - 5
கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்
காயங்கள் எல்லாம் குறைய வேண்டும் - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2

மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்

மாதாவே சரணம் பாடல்



மாதாவே சரணம்  பாடல் வரிகள்


மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எமை மேவாமல் - 2
காவாயே அருள் ஈவாயே - கன்னி

பல்லவி - 1
மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் - 2
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் - 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் -மாதாவே

பல்லவி - 2
நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலமெல்லாஸ்திக ஆணவம் ஒழிய - 2
உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் – 2
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் -மாதாவே

அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி

அன்னை மாமரி பாடல்



அன்னை மாமரி  பாடல் வரிகள்


அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி
என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்
தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும்
உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் - 2

பல்லவி - 1
எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ
எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் - 2
நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்
சகாயத் தாய்மரியே எம்மை அரவணைத்துக் காப்பாய் நீயே - 2

பல்லவி - 2
அண்ணல் இயேசு அன்பு வழியைக் கற்றுத் தந்த உன்
அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே - 2
நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்
சகாயத் தாய்மரியே எம்மை அரவணைத்துக் காப்பாய் நீயே - 2

Thursday, 13 July 2017

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா

உம்மைத் தேடி வந்தேன் பாடல்



உம்மைத் தேடி வந்தேன்  பாடல் வரிகள்


உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா – 2
உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2

பல்லவி - 1
முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் - 2
பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய்
பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2

பல்லவி - 2
கடல்நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் - 2
உலகாளும் தாயே உனை பாடும் வேளை – 2
நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா – 2

பல்லவி - 3
மலடான மங்கை மடிமீது மகனை
மகிழ்ந்தட செய்த மகிமையின் தாயே - 2
குருடனோர் உன்னை கரம் கூப்பி நின்றால்
அருளாகி அவர்க்கு ஒளி தாரும் தாயே - 2

கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா

கோடி விண்மீன் பாடல்



கோடி விண்மீன்  பாடல் வரிகள்


கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா
அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா - 2
சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை - 2
அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே

பல்லவி - 1
வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி
தாய் பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன - 2
ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா - 2
அன்னை தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா

பல்லவி - 2
ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில்
அருள்நிறை மரியே என்று ஜெபிப்பதும் என்ன- 2
கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த
காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே - 2

பல்லவி - 3
கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்க்கும்
அன்னை வீடாக வேளைநகர் இருப்பதேனம்மா - 2
தீராத பிணி தீர்க்கும் ஆரோக்கியமாதா - 2
உன் திருப்பாதம் பட்ட மண் வேளாங்கண்ணி - 2