உம்மைத் தேடி வந்தேன் பாடல்
உம்மைத் தேடி வந்தேன் பாடல் வரிகள்
உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2
பல்லவி - 1
முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் - 2
பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய்
பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2
பல்லவி - 2
கடல்நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் - 2
உலகாளும் தாயே உனை பாடும் வேளை – 2
நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா – 2
பல்லவி - 3
மலடான மங்கை மடிமீது மகனை
மகிழ்ந்தட செய்த மகிமையின் தாயே - 2
குருடனோர் உன்னை கரம் கூப்பி நின்றால்
அருளாகி அவர்க்கு ஒளி தாரும் தாயே - 2
No comments:
Post a Comment