என்னில் வந்த நாதனுக்கு பாடல்
என்னில் வந்த நாதனுக்கு பாடல் வரிகள்
நெஞ்சார என்றும் நன்றி சொல்வேன்
வாழ்வளித்த வள்ளலுக்கு வாழ்வளிக்கும் இயேசுவுக்கு
வானெங்கும் முழங்க நன்றி சொல்வேன்
நன்றி நன்றி என்றும் நன்றி சொல்வேன் - 2
பல்லவி - 1
பாவங்களைப் போக்கினார் நன்றி சொல்வேன்
பயமதையே நீக்கினார் நன்றி சொல்வேன் - 2
பரிவுடனே நோக்கினார் நன்றி சொல்வேன்
பாதைதனைக் காட்டினார் நன்றி சொல்வேன்
உண்மை அன்பு நீதியை உணரச் செய்த இயேசுவை
உளமாரப் பாடியே நன்றி சொல்வேன் - 2 - நன்றி...
பல்லவி - 2
எளியவரை நோக்கினார் நன்றி சொல்வேன்
ஏழைகளை நேசித்தார் நன்றி சொல்வேன் - 2
அடிமைகளின் விலங்கொடித்தார் நன்றி சொல்வேன்
அடியவரின் குரல் கேட்டார் நன்றி சொல்வேன்
உரிமை தரும் வேள்வியை உணரச் செய்த இயேசுவை
ஆடியே பாடியே நன்றி சொல்வேன் - 2 - நன்றி ...
Nandri Silvan .super
ReplyDeletePraise the Lord
ReplyDeleteSuper God is great😍
ReplyDelete