Saturday, 22 July 2017

செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பட்டோர்

செம்மறியின் விருந்துக்கு பாடல்



செம்மறியின் விருந்துக்கு  பாடல் வரிகள்


செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர்
அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க - 2

பல்லவி - 1
இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன
உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன - 2
உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய்
உவகை என்னும் ஒளி கொணர்ந்து என்னை ஆளுவாய்

பல்லவி - 2
வானம் பொழிய பூமி விளையும் வளமும் பொங்குமே
வலமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே - 2
எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே
உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே

No comments:

Post a Comment