தந்தேன் வாழ்வினை அர்ப்பணமாய் பாடல்
தந்தேன் வாழ்வினை அர்ப்பணமாய் பாடல் வரிகள்
தலைவனுன் பீடத்தில் காணிக்கையாய் - 2
தகுதியில்லா என்னை உம் அன்பினால்
தயவுடன் ஏற்பாய் பலிப்பொருளாய்
பல்லவி - 1
உழைப்பின் பலனைப் படைத்திட வந்தேன்
உம் திருப்பதத்தில் எனை ஏற்க வேண்டும் - 2
உம் அருள் துணை நம்பி வாழ்வினைத் தொடர்ந்திட - 2
உவந்து நீர் ஏற்பீர் ஏழை என் காணிக்கை
இறைவா ஏற்பாய் நிலைக்கும் உறவாய்
இறைவா இணைப்பாய் என் வாழ்வை இனிதாய்
பல்லவி - 2
ஆறுதல் இன்றி வாழ்ந்திடும் வறியோர்
ஆனந்தம் அடைந்திட அடியேனைத் தேர்ந்தீர் - 2
அன்பதன் கொடைகளை அவனிக்கு அளித்திட - 2
அர்ப்பண பலி என்னை அன்பாய் ஏற்பீர்
இறைவா ஏற்பாய் நிலைக்கும் உறவாய்
இறைவா இணைப்பாய் என் வாழ்வை இனிதாய்
No comments:
Post a Comment