உன் சிறகுகள் நிழலில்பாடல்
உன் சிறகுகள் நிழலில் பாடல் வரிகள்
அரவணைத்திடு இறைவா
எந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண்தணலிலும் மனம் குளிரும் - 2
உந்தன் கண்களின் இமைபோல்
எந்நாளும் என்னைக் காத்திடு என் இறைவா- 2
பல்லவி - 1
பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும்- 2
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும்- 2
பல்லவி - 2
வலையினில் விழுகின்ற பறவை
அன்று இழந்தது அழகிய சிறகை- 2
வானதன் அருள் மழை பொழிந்தே
நீ வளர்த்திடு அன்பதன் உறவை- 2
No comments:
Post a Comment