எந்தன் இதய இனிய வேந்தன் பாடல்
எந்தன் இதய இனிய வேந்தன் பாடல் வரிகள்
என்னில் வந்து தங்கும் நேரம் வந்ததும் வசந்தம் வீசுமே
வசந்தத்தில் வாழ்வுண்டு வாழ்வில் அவனுண்டு - 2
என்னில் அவனும் அவனில் நானும் என்றும் ஒன்றுதானே
பல்லவி - 1
வாழ்க்கை மூச்சு நின்றுவிடும் அன்பே
வீசிடும் காற்று நீ எனில் இல்லையென்றால் - 2
ஓடோடி வந்தேன் உனை என்னில் ஏற்க
ஒன்றாகும் நேரம் நான் உன்னைப்பாட ஆ..
அன்பு தெய்வமே அருள் தாருமே
நீ மீட்டும் வீணையும் நான் பாடும் பாடலும்
இறைக்கடலில் சங்கமிக்கும் இதய வேந்தனே
பல்லவி - 2
நிம்மதி நீயாய் இருக்கின்றபோது
நிதமும் நீ என்னில் தங்கிடவேண்டும் - 2
சிந்தனைகள் யாவும் நீர் சீர்படுத்தவேண்டும்
சொல் செயல் யாவும் தூய்மையாக வேண்டும் ஆ..
அன்பு தெய்வமே அருள் தாருமே
என் வறுமை எனும் இருள் உன் வளமை ஒளியிலே
அகன்றிட வேண்டும் என் அன்பு தெய்வமே
No comments:
Post a Comment