ஏழிசை நாதனே எழுவாய் பாடல்
ஏழிசை நாதனே எழுவாய் பாடல் வரிகள்
அருளை என்னில் நீ பொழிவாய்
பல வரங்கள் தந்து எனைக் காப்பாய்
வழிகாட்ட எழுந்து வருவாய்
பல்லவி - 1
வாழ்வும் வழியும் நீ எனக்கு வளங்கள் சேர்க்கும் அருமருந்து - 2
உறவை வளக்கும் விருந்து - 2
என்னில் நிறைவை அளிக்கும் அருளமுது
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து - 2
பல்லவி - 2
விழியும் ஒளியும் நீ எனக்கு விடியல் காட்டும் ஒளி விளக்கு - 2
மனிதம் வாழும் தெய்வம் - 2
என்னில் புனிதம் வளர்க்கும் நல் இதயம்
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து - 2
No comments:
Post a Comment