Saturday, 22 July 2017

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா

வரம் கேட்டு வருகின்றேன் பாடல்



வரம் கேட்டு வருகின்றேன்  பாடல் வரிகள்


வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா - 2

பல்லவி - 1
பகைசூழும் இதயத்துச் சுவரையெல்லாம் - என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
புகைசூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் - 2 உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்

பல்லவி - 2
நம்பிக்கை இழந்தோரின் முகம் பார்த்தபின் - நல்
நம்பிக்கை பெற வேண்டும் என கேட்கிறேன் - 2
அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்தபின் - 2
உன் அன்பு எண்ணி வரவேண்டும் என கேட்கிறேன்

உங்கள் பயிற்சிக்காக
பல்லவி - 3
நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
பலியாக பிறர்க்கென்னை அளித்திட்டபின் - 2 என்
பரிசாக உனை கேட்கும் வரம் கேட்கின்றேன்

பல்லவி - 4
எளியோர் தம் விழி பேசும் துயரமெல்லாம் - என்
இதயத்தை பிளக்கட்டும் எனக்கேட்கின்றேன் - 2
ஒழியில்லா இல்லங்கள் இதயங்களில் - 2
நல் ஒழியேற்றும் விளக்காக வரம் கேட்கின்றேன்

No comments:

Post a Comment