நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன்
நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன் பாடல் வரிகள்
உனையழைத்தேன் நீ வா வா
சிந்தையெல்லாம் நொந்தழுதேன் -2 சொந்தமெல்லாம்
பல்லவி - 1
அன்புமொழி பேசும் இன்பமுகில் இயேசு
எந்நாளும் நண்பன் நீயே - 2
கண்ணின் மணிபோல காத்திடுவோனே - 2
உன் அன்பு ஒன்றே நான் வேண்டினேன்
பல்லவி - 2
வானின் முழு நிலவே வாழும் உயிர்ச்சுடரே
நீயின்றி வாழ்வேதைய்யா - 2
பாடி வரும் தென்றலில் ஆடிடும் மலராய் - 2
உன் ஆசீர் தந்தால் மகிழ்வேனைய்யா
பல்லவி - 3
சோகம் வந்து தாக்கும் போது என்னைக் காக்கும்
என் ஆயன் நீயே அன்றோ- 2
மாசு கொண்ட உள்ளம் பேசும் உந்தன் நாமம்
இயேசு எந்தன் வாழ்வின் தெய்வம் நீயே
No comments:
Post a Comment