என்னோடு நீ பேச வந்தாய் பாடல்
என்னோடு நீ பேச வந்தாய் பாடல் வரிகள்
என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்- 2
என் தெய்வமே என் தெய்வமே
நீயின்றி நானில்லையே உன் நினைவின்றி வாழ்வில்லையே
பல்லவி - 1
இதய தாகம் நீ இருளில் தீபம் நீ
உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ
தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்
தீராத துன்பங்களில் நீ தாயாகி தாலாட்டினாய்
பல்லவி - 2
உயிரின் தீபம் நீ உலகின் வேதம் நீ
மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ
என் பாதையில் முன்போக வா
கண் போலவே எனைக் காக்க வா
ஆதாரம் நீயாகவே உன் அன்பொன்றே எனதாகவே
No comments:
Post a Comment